அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றி

236 0
தனித்து போட்டியிட்டு இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற தமது எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சி செய்தால், தமது கட்சி எப்போது ஆட்சிக்கு வரும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் பார்த்துக்கொண்டிருப்பர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி செய்தால், தமது கட்சி எப்போது ஆட்சிக்கு வரும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் காத்திருப்பர்.
இதுதான் கடந்த கால அனுபவங்களாக காணப்பட்டதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியுள்ளார்.