இந்திய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை! – கடற்படைப் பேச்சாளர்

249 0

இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கை கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கடற்படைப்பேச்சாளர் லெப். கொமாண்டர் சமிந்த வலாக்குழுகே தெரித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவதினத்தன்று இந்திய மீனவர்கள்பயன்படுத்திய ஜீ.பி.எஸ்.உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களை இலங்கையின் கடற்படைக்கு பெற்றுத்தருமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை முன்வைத்திருந்தது. எனினும் இந்தியா இதுவரை அத்தகவல்களை இலங்கைக்கு வழங்காமையினால் விரிவான விசாரணையை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப தகவல்கள் கிடைக்கும்வரை காத்திராமல் இலங்கை கடற்படையினால் நிறைவேற்றப்பட்ட விசாரணை அறிக்கையை இவ்வாரத்திற்குள் கடற்படைத் தளபதியிடம் கையளிக்கவிருப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.