இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

