நீர் வீழ்ச்சியில் மரம் முறிந்து வீழ்ந்தது – 18 பேர் பலி

231 0

கானா, கின்றம்போவில் உள்ள பிரபலமான நீர் வீழ்ச்சியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனை அடுத்து குறைந்தது 18 பேர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.

இது தவிர, மேலும் 22 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என கானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில சுற்றுலாப் பயணிகளும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் வீழ்ச்சியினில் மாணவர்கள் நீச்சலடித்துக் கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

மீட்பு பணியாளர்கள் விருச்சத்தின் கீழ் அகப்பட்டிருந்தவர்களை, கிளைகளை வெட்டி பலரை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கு கானாவின் ஜனாதிபதி நானா அக்குபோ-அடோ தமது அனுதாபத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.