ஐரேப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவர் குறித்து பிரித்தானியா உத்தியோக பூர்வமாக அறிவிக்க உள்ளது

268 0

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து நாளை பிரித்தானியா உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளது.

பிரித்தானிய பிரதமர் தேரேசா மே, இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த விரிவான கடிதம் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கடிதத்தை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியதன் பின்னர் அதன் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பின்னர் பேச்சு வார்தை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.