இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் ; பொலிஸாரிடம் ஒப்படைப்பு

56 0
இராணுவத்தினரால்  இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் மணல் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது, அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகம்வில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.