தலைப்பகுதி உடலிலிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

78 0

மத்துரட்ட ஹேவாஹெட்ட பிரதேசத்தில் 70 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலத்தின் தலைப்பகுதி உடலிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரது மகன் ஹகுராங்கெத்த பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.