நடுக்கடலில் வீழ்ந்து உயிரிழந்த மீனவரின் சடலம் பருத்தித்துறை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது !

93 0
மீன்பிடிப் படகில் நேற்று (16) மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) அதிகாலை 1.30 மணிக்கு பருத்தித்துறை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்ற மீனவரே நடுக்கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.