ஹரக்கட்டா தாக்கல் செய்த மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு!

206 0
குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற சந்தேக நபரை  கோட்டை நீதிவான் நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபருக்கு  அறிவிக்காமல் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அழைத்துச் செல்லவோ அல்லது  இடமாற்றவோ வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற ‘ஹரக்கட்டா’ தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யும்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்  நீதிபதிகளான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் அடங்கிய அமர்வே  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த   மனு மீதான விசாரணை இம்மாதம்  25 ஆம் திகதி மீண்டும் இடம்பெறவுள்ளது.