18.750 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வனாத்துவில்லு – புத்தளம் வீதியின் 6 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த கேரள கஞ்சா தொகை, மோட்டார் வாகனத்தில் கொண்டு செல்லும் போதே கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
சந்தேக நபர் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.