வடமாகாணத்தை சேர்ந்த 5 கூட்டுறவு சபை உபதலைவர்கள் இந்தியா பயணம்

234 0
வடமாகாணத்தில் உள்ள  5 கூட்டுறவு சபைகளினதும்  உப தலைவர்களும்   நிர்வாக  பயிற்சி வகுப்பிற்காக இன்றைய தினம் இந்தியாவின் மும்பாய் பயணமாகின்றனர்.
கூட்டுறவுகள் தொடர்பான நிர்வாகம் , நிதி சார் விடயங கள் கூட்டுறவின் மூலம் தற்போதைய சந்தைய பெருக்குவது மற்றும் தற்போதைய உலக சந்தை வளர்ச்சிக்கி ஏற்ப கூட்டுறவின் வளர்ச்சிப்பாதையை வகுத்தல் போன்ற பயிற்சி வகுப்புகளிற்காகவே இவ்வாறு இலங்கையில் இருந்து செல்லும் அணியில் வடபகுதியில் இருந்தும் 5 பேர் பயணிக்கின்றனர்.
இவ்வாறு இந்தியாவில் இடம்பெறும் குறித்த பயிற்சி வகுப்பில் நேபாளம் , பூடரடான் , பங்களாதேஸ் , மாலைதீவு , இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிகளின் கூட்டுறவாளர்களும் கலந்து கொள்கின்றனர். 10 நாட்கள் இடம்பெறும் பயிற்சி வகுப்பில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் வளவாளர்களும் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.