கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்திற்கான நடமாடும் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது

237 0
கிளிநொச்சி, மற்றும் மூல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடந்த கால யுத்தத்தின் போது தமது உரிமைச்சான்றிதழ்களை தவற விட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற புதிய செயற்திட்டம் தொடர்பாக திணைக்கள தலைவர்கள், மற்றும் மாவட்ட பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்றது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ  கரு வஜீர அபேவர்த்தன, மற்றும் மகளிர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவைத்தனர்.  அமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.