பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு !

39 0
2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டுக்காக 45 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அது தொடர்பான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல் கையேடுகளை அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.