வெல்லம்பிட்டியில் ஒருவர் சுட்டுக் கொலை!

50 0

வெல்லம்பிட்டி, கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (28) பகல் ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது  உயிரிழந்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.