யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய வியாபாரியான கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்தியாவில் தமிழகத்தினைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த மாதம் பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.இன்றைய தினம் வயிற்றுவலி என சிறைச்சாலை அதிகாரிகளிடம் தெரிவித்த போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குறித்த நபர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இவ்வாறு அனுமதிக்கப்பட்ட வேளையில், கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு கழிவறைக்குள் சென்றவர் தப்பிச்சென்றுள்ளார்.
கழிவறைக்குச் சென்றவரை நீண்ட நேரமாக காணவில்லை என தேடிய போதே அவர் தப்பிச் சென்றுவிட்டதாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அறிந்து கொண்டுள்ளனர்.தப்பிச் சென்ற கைதியை பொலிஸாரின் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டு வருகின்றார்கள்.

