கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் விபத்தில் மரணம்

245 0

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அஷ்வின் சுந்தர் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அஷ்வின் சுந்தரின் மனைவி நிவேதாவும் பலியானார்.

சென்னை சாந்தோம் சாலையில் இன்று (சனிக்கிழமை) அஷ்வின் சுந்தரின் பிஎம்டபில்யு கார் மரத்தில் மோதி தீப்பற்றி எரிய தொடங்கியது. கட்டுப்பாடற்று பரவிய தீயில் காரிலிருந்து வெளியேற முடியாமல் அஷ்வின்சுந்தரும், அவரது மனைவியும் மாட்டிக் கொண்டனர்.

இதில் சம்பவ இடத்திலே இருவரும் பலியாகினர். போக்குவரத்து காவல் துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அஷ்வின் சுந்தரின் இந்த திடீர் மரணம் கார் பந்தய வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு பார்முலா கார் பந்தயப் போட்டிகளில் அஷ்வின் சுந்தர் சாம்பியன் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.