மாணிக்க கல் தோண்டியவர்கள் கைது

240 0

ரத்தினபுரி, ஹங்கமுவ கங்கை கரங்கொட பிரதேசத்தில் ஆற்றங்கரைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்தினபுரி முகாமின் அதிகாரிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்போது, அவர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் ரத்தினபுரி மாணிக்கக் கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் தலா 2500 ரூபா பெறுமதியான அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.