டெங்கு நோய்க்கு பலியான இன்னுமொரு பிஞ்சு

221 0

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவியொருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

தரம் ஒன்றில் கல்வி கற்கும் உதயராஜன் அஞ்சனா என்ற 6 வயது மாணவியே டெங்கு நோயால் உயிழந்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அவர் உயிரிழந்ததார்.