திருகோணமலையில் பாடசாலையை பலவந்தமாக பூட்டிய பெற்றோர்

276 0

திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அபயபுர ஆரம்பபிரிவு பாடசாலையானது, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோரினால் வாசற்கதவு பூட்டு போடப்பட்டு பலவந்தமாக மூடப்பட்டது.

இப்பாடசாலையில் 309 மாணவர்கள் கல்வி பயில்கின்ற போதிலும் 5 ஆசிரியர்களே உள்ளனர் என்றும், குறைந்தபட்சம் மேலும் 5 ஆசிரியர்களாவது வேண்டும் என அப்பாடசாலையின் அதிபர் டு. பாலசூரிய குறிப்பிடுகின்றார்.

இது சம்பந்தமாக வலய கல்வி அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் உட்பட்டோருக்கு தெரியப்படுத்தி அதற்கு அவர்கள் குறைந்த பட்சம் இரு ஆசிரியர்களையாவது தருவதாக உறுதியளித்தும் இன்றுவரை அவ்வுறுதி நிறைவேற்றப்படவில்லை என்று அவர் கூறினார்.

இது குறித்து உரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் பாடசாலையை மூடுமாறு கூறியதால், பெற்றோராகிய நாங்களே பாடசாலையை மூடியதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.