பிணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்

109 0

இலங்கையின் சுதந்திரதின மறுப்பு போராட்டத்தில் பங்கு பற்றியயமைக்காக நேற்று(7) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் மற்றும் கே.சிவாஜிலிங்கம்,வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி  பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கரைச்சி பிரதேசசபை முன்னாள் தவிசாளருக்கு எதிராக காவல்துறையால்  தொடுக்கப்பட்ட வழக்கிற்காக நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அனைத்து சட்டத்தரணிகளும் ஒரு முகமாக எழுந்து வழக்கினை எதிர்கொண்டு நியாயத்தை சுட்டிக்காட்டிய நிலையில் பிணையில் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.