ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்த 25 வயதான இளைஞர்!

59 0
லுனுகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதான இளைஞர் ஒருவர்  ஹோட்டல் ஒன்றின்  நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (30) சில நண்பர்களுடன் ஹோட்டலில்  தங்கிய போது நீச்சல் தடாகத்தை பயன்படுத்தியுள்ளார்.

இதன்போதே அவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டு  கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.