காவலாளியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கல்கிஸை பாடசாலை ஒன்றின் அதிபர் கைது!

52 0

காவலாளியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கல்கிஸையிலுள்ள  அரச பாடசாலை ஒன்றின் அதிபர்  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான காவலாளியான ஹொரணை, மேவனபலான பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான  என்ற இளைஞராவார்.

இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாடசாலையில் மது அருந்திவிட்டு அதிபர் தாக்குதலை மேற்கொண்டதாக காயமடைந்த காவலாளி பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான  அதிபர் உட்பட ஐவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.