புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் நேற்று சனிக்கிழமை (29) மாலை நேர வகுப்பு முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ரப்பர் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் குறித்த இளைஞரின் ஆடைகளை அகற்றி, கைகளை கட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

