24 ஆவது கார்கில் போர் நினைவுக்கூரல்

141 0
1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில்,   புதன்கிழமை (26) லடாக்கில் 24வது கார்கில் விஜய் திவாஸிற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை விருந்தினராக இந்த நிகழவில் கலந்துக்கொள்ள உள்ளார்.

தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துவார்.

இதற்கிடையில், இன்று லாமோசென் வியூ  பாதுகாப்பு மையத்தில் இந்திய இராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தை எடுத்துரைக்கும் போர்களின் ஆடியோ மற்றும் காட்சி விவரணையை விளக்கும் மாநாடு நடத்தப்பட்டது.

இராணுவ இசைக்குழு தேசபக்தி பாடல்களை நிகழ்த்தி வழங்கும். அதைத் தொடர்ந்து, உள்ளூர் கலாச்சார கலைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனங்கள் மூலம் பங்கேற்பார்கள்.

இந்திய இராணுவத்தின் மீதான உள்ளூர் மக்களின் அர்ப்பணிப்பை நிரூபிப்பார்கள் என்று உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவுக்கூரப்பட உள்ளனர்.