எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை.
அன்று அச்சமடைந்தோம். அச்சத்தோடு மாத்திரம் இருக்கவில்லை. கிராமங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நிலைமை தற்போது அவ்வாறில்லை என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
இதன்போது கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சந்திப்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற ரீதியில் பொறுப்புகளை சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்குமாறும் கோரினோம். இருப்பினும் அவர்கள் வழங்கவில்லை.
இது தொடர்பில் நாம் கவலையடைகிறோம். தற்போது நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களுக்கு வலு சேர்க்கும் நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம்.
எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் போட்டியிடுவோம். மேலும் நாம் தேர்தல் தொடர்பில் அச்சமடையவில்லை.
இருப்பினும் நாம் அச்சமடைந்தோம். அச்சத்தோடு மாத்திரம் இருக்கவில்லை. கிராமங்களுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
மரண வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை காணப்பட்டது. தற்போது அவ்வாறில்லை. எமது தரப்பினர்கள் சுதந்திரமாக கிராமங்களுக்கு சென்று மக்களுடன் வாழ்கின்றனர் என்றார்.

