கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று தொழிற்சங்ககங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டமூலத்தை மீளப்பெறு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வுதியம் கொள்ளையை நிறுத்து என்று வலியுறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதனால் கொழும்பு புறக்கோட்டையின் ஒல்கொட் மாவத்தை ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

