மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரமொன்றை வெட்டிக்கொண்டிருந்த இரண்டு பேர் இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் இராணுவத்தினர் காவற்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து குறித்த கைகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
81 ரக இரு குண்டுகளும் ஜே.ஆர்.ரக இரு கைகுண்டுகளும் இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.