யாழ். மீசாலையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி !

135 0

யாழ். தென்மராட்சி மீசாலை, புத்தூர் சந்திக்கு அருகில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வயோதிபர் மீது புகையிரதமொன்று மோதியதில், குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.

இன்று கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், முற்பகல் 11.30 மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அப்புகையிரத கடவையை வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்டுள்ளார்.

அவ்வேளை அந்நபர் மீது குறித்த புகையிரதம் மோதியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளளார்.

இவ்விபத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.