தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு வவுனியாவில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,
மகளிர் விவகார தேசிய அமைச்சின் செயலாளர் திருமதி எமில்டா சுகுமார், சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளான சி.சதீஸ்குமார், ந.தேவகிருஸ்ணன், தே.தேவசாந்தன், வட மாகணத்திலுள்ள பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ் முஸ்லிம் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலை நிகழ்வுகள், வட பகுதி குடும்ப தலைமைத்துவப் பெண்கள் தொடர்பாக, 300 குடும்பங்களில் மேற்கொண்ட ஆய்வறிக்கை வெளியீடு, அது தொடர்பான விளக்கம், முல்லைத்தீவு பிலக்குடியிருப்பு காணி போராட்டத்திற்கு தலைமைத்துவம் வழங்கி, போராட்டத்தை வெற்றி கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பெண் கௌரவிக்கப்படல் ஆகியன நடைபெற்றன.

