மியன்மாரில் இடம்பெற்ற மோதல்களில் இராணுவத்துக்கு பெரும் இழப்பு

265 0

மியன்மாரில் இடம்பெற்ற மோதல்களில் அந்த நாட்டின் இராணுவத்துக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் நீண்டகாலமாக இனரீதியான போராட்டக் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் சீன – மியன்மார் எல்லைப் பகுதியில் கடந்த சில தினங்களில் 48க்கும் அதிகமான மோதல்கள் இடம்பெற்றன.

இதில் பல இராணுவத்தினர் உயிரிழந்துடன், மேலும் பலர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மியன்மாரில் இருந்து சீனாவுக்கு தப்பிச் செல்கின்றவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.