கிண்ணியாவில் டெங்கு நோயினால் 12 பேர் உயிரிழப்பு

247 0

கிண்ணியாவில் இன்று வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1150 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 71 நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 247 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம். அஜித் தெரிவித்தார்.

கிண்ணியாவில் வேகமாக பரவி வரும் டெங்கு நோய்களை கட்டுப்படுத்தும் விதத்தில் பாரிய சிரமதானப்பணிகளையும் மக்களுக்கு விழிப்பூட்டல்களையும் நடாத்தி வருவதாகவும் வீடு வீடாகச்சென்று சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு பரவும் விதத்தில் காணப்படுகின்ற பாழடைந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய டொக்டர் அஜித் மேலும் கூறினார்.

இதேவேளை குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குற்பட்ட பகுதியில் 12 பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 11 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.