அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று டி.என்.ஏவுடன் இருப்பவர்கள் அன்று விடுதலைப் புலிகள் அமைப்புடன் இருந்தவர்கள் என குறிப்பிட்ட அவர், இவர்களே யுத்தக் குற்றங்கள் குறித்து குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாகவும் கூறியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரது பொறுப்பு தனது நாடு தவறிழைக்கவில்லை என காட்டுவதே தவிர, தவறு என்று உலகத்திற்கு கூறுவது அல்ல எனவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.