போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் – கோட்டாபய

243 0
போர்க்குற்றங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் ஒருகாலத்தில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர்.ஆனால் தற்போது மனித உரிமைகள் பாதுகாப்பு வீரர்களாக மாறி இருக்கின்றனர்.சமுக வலைத்தளங்களை பார்த்தால் தற்போது மகிந்த ராஜபக்ஷவையும், தம்மையும் யுத்தக்குற்றவாளிகளாக சித்தரிக்கின்றனர்.
ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் குறித்து யாரும் குற்றம் சுமத்துவதில்லை.
 அவரை தெய்வத்தைப் போன்று சித்தரிக்கின்றனர் என்று கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்