தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்

241 0

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது மேற்கொள்ளும் குற்றச்சாட்டை முழுவதுமாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய முற்படவில்லை என தெரிவித்து அவர்களின் உறவினர்கள் குழுவொன்று கருப்பு கொடி ஏந்தி நேற்று யாழ்ப்பாண நகரில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில ்கலந்து கொண்ட போது சுமந்திரன் இந்த கருத்தை தெரிவித்திருந்தார்.