மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இரண்டாவது முறையாக முன்னிலையாகவுள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறையாக அவர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவரிடம் 6 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.