மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – நிர்மலா சீதாராமன்

229 0
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் காலதாமதம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
இதேவேளை, தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விடயத்திலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.