வவுனியாவில் 17ஆவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

246 0

வவுனியாவில் காணாமற்போனாரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்ட தமது உறவுகளை ஒப்படைக்குமாறும் அவசர காலச்சட்டத்தினை நீக்குமாறும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும் தெரிவித்து தமது போராட்டத்தினை இன்று 17 ஆவது நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.