வாகரையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

230 0

மட்டக்களப்பு வாகரை கட்டுமுறிவு கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் சட்டவிரோதமாக செயற்பட்டுவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றிட்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோத மது உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனது.

அத்துடன், கொள்கலளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.