ரயிலில் இருந்து தவறி விழுந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி

228 0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து அவுஸ்திரேலிய பிரஜைபொருவர் உயிரிழந்துள்ளார்.

 

அலவ்வ -வலகுபுர பகுதயில் வைத்து குறித்த அவுஸ்திரேலிய பிரஜை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்த அவுஸ்திரேலிய பிரஜையின் சடலம் பொல்கஹாவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.