எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது: தீபா

284 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெ.தீபா அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பதைவிட அரசியலுக்கே புதியவர்.

ஜெயலலிதாவின் மருமகள் என்ற ஒற்றை தகுதியோடு மட்டுமே தேர்தலை சந்திக்கிறார். அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று தீபா நம்புகிறார். இது பற்றி அவர் கூறியதாவது:-

உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் சசிகலா தலைமையை ஏற்கவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை ஆகும். அங்கு வேறு யாருக்கும் இடம் கிடையாது. ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள். என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.