சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

260 0

சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, ஆலையில் பணியாற்றி வந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிழந்தனர். பட்டாசு தயாரிப்பின் போது ரசாயன கலவை மருந்தினை செலுத்தும் போது விபத்து நேரிட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் இடிந்து விழுந்தன. விபத்து ‌நடந்த பகுதிக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த வெடிவிபத்தில் படுகாயம் அடைந்த மூர்த்தி என்பவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பட்டாசு ஆலையின் உரிமையாளர் சக்தி சண்முகம் மற்றும் மேற்பார்வையாளர் மகேந்திரன் ஆகியோர் மீது வேம்பகோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர் மகேந்திரன் ‌காவல் நிலையத்தில் சரணடைந்தார்.