திருகோணமலை தோப்பூர் உல்லைக்குளத்தில் நீராடசென்ற சிறுமிகள் இருவரில் ஒருவரை முதலையொன்று காலில் கவ்வியபடி இழுத்துச்சென்றதில் அச்சிறுமி நீரில் காணாமல் போனார்.
பின்பு நடந்த தேடுதலில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அல் சிபா பாடசாலையில் ஆண்டு 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .