யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் நேற்று விடுதலை(காணொளி)

228 0

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலை செய்யப்பட்ட அனைவரும், இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களை விடுதலை செய்யமாறு ஊர்க்காவற்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

தமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னர், இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுகளும் தங்கள் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்தது.

அதன்படி, இலங்கைச் சிறைகளில் மொத்தமாக 85 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.