கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் கிழக்கு ஆளுநரால் கையளிப்பு!

126 0

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின்  நிலைபேண்தகு விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (9) திருகோணமலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல, மாகாண பிரதம செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.