ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் வென்சர் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (06) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் பகுதியில் உள்ள அனுமதியற்ற மாணிக்கக்கல் குவாரி ஒன்றை சோதனையிடுவதற்காக நோர்வூட் சென் ஜோன் டில்ரே தோட்டப் பகுதியிலிருந்து ஜீப் சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.