மாத்தளையில் இன்று பஞ்சரதபவனி

217 0

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனியை முன்னிட்டு மாத்தளை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தேவஸ்தானத்தில் இன்று நடைபெறவுள்ள மகோற்சவத்தை முன்னிட்டு இந்து கலாசாரப் பேரவை 35 வது வருடமாக நேற்று காவடி ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சுதுகங்கை ஸ்ரீ ஏழு முகக் காளியம்மன் ஆலயத்திலிருந்து நேற்றுக் காலை 8 மணிக்கு ஆரம்பமான காவடி ஊர்வலம் இன்று தேவஸ்தானத்தை காலை 10.30 மணிக்கு வந்தடைந்தது.