கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு

97 0

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (6) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இயந்திரப் படகில் மூன்று மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்ற போது அதில் ஒருவர் படகில் தூங்கியுள்ளார்.

நீண்டநேரமாக தூங்கிய நபரை எழுப்பிய ஏனைய மீனவர்கள் அவர் மரணமடைந்து கிடந்ததை அறிந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் துறைமுக அதிகாரிகளுக்கு மீனவர்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சடலத்தை கரைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு மரணமடைந்த நபர் ஓட்டமாவடி – 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.