யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை!

247 0

யாழ். சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட அனைவரும், இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களை விடுதலை செய்யமாறு ஊர்க்காவற்து றை நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பின்னர், இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுகளும் தங்கள் சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்தது.

அதன்படி, இலங்கைச் சிறைகளில் மொத்தமாக 85 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அனைவரும் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.