பபாவின் பிரதான உதவியாளர் ஜேர்மன் தயாரிப்பு மைக்ரோ பிஸ்டலுடன் கைது

133 0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான கலுஹத் நதீஷ் குமார அப்ரு எனும் “பபா”வின் பிரதான உதவியாளராக செயற்படும் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை (29) அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதானையில் அமைந்துள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன ரக 08 மி.மி. மைக்ரோ பிஸ்டல், 01 தோட்டா மற்றும் 50 கிராம் ஹெரோயின் ஆகியன கைதான நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் அஹுங்கல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.