கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது

143 0

கல்கிசையில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த  சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரைக் கொல்வதற்கு பயன்படுத்திய கத்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்த நபரிடம் பலாப்பழம் விற்பனை செய்ய வந்ததாகவும் அதன்போது ஒரு பலாப்பழத்துக்கு 250 ரூபா தருமாறு கேட்டதாகவும் உணவக உரிமையாளர் 200 ரூபா தருவதாக கூறியதாகவும்  இதனால் ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.